Wednesday, 22 February 2012

Saddaa Haq In Tamil

Rockstar songs  has been a great sensational hit last year. Sadda Haq has become a national sensational hit. Everyone of us would have imbued by it’s music ofcourse. Sadda Haq lyrics is equally impressive. It’s very straight forward and I actually wondered how Censor board have not raised any objection for such a bold song.

இந்த பாடலை தமிழில் எழுத தில் வேண்டும். இதை மொழி பெயர்த்து இருந்தால், அவ்வளவு புரட்சிகரமாக 
யாரும் எழுதி இருக்க மாட்டார்கள். அரசியல், மத இன வேறுபாடுகள் கொண்ட இந்த போலி தனமான
சமூகத்தில், உண்மை மனித உணர்வுகளுக்கு இடம் இல்லாமல் பொய் விட்டது..!
இக்கருதக்களை, Sadda Haq பாடலை தவிர வேறு எந்த பாடலும் எடுத்துரைக்க முடியாது..
என்னால் முடிந்த அளவுக்கு அப்டியே தமிழில் மொழி பெயர்க்க முயன்று, பின்பு
பாடலில் இல்லாத சில வரிகளை இணைத்து உள்ளேன்..Pl dont  care about எதுகை, மோனை..


                         
                                 என்னை வளர்த்த என் திருநாடே!..
                         என் உரிமையை எனக்கு மீட்டு தாராயோ!
                         என் வாதம் தவறென்று சொல்லும் சமூகமே,
                         நான் சொல்வது தவறெனில், பின் யார் சொல்வது
                          சரி என்று கூறாயோ!..                        

                       
                        
                        ஏ சமூகமே,
                        என் வாழ்வை நான் வாழ உன்னிடம் கை ஏந்த வேண்டுமோ!..
                        என் தல எழுத்தை மாற்றி எழுத உனக்கு யார் தந்த                                           அதிகாரமோ! 

                      
                              என் உரிமையை( Sadda  Haq )
                         என் கையில் வை(Eythey raq )

                         என் உரிமையை
                         எனக்கு மீட்டு கொடு!..
                        
                         என் உரிமையை
                         என் முன்னே வை!..

                         என் வாழ்வில் என் கனவுக்கு
                         இட ஒதுக்கீடு கொடுக்க இந்த
                         அரசு என்னை படைத்த பிரம்மாவா!..


                                  என் நாடே!..
                         உன் போலி தனமான சமூகத்தில்
                         வாழ தகுதி இல்லா
                         உண்மை பாமரன் நான்!..

                         என் இதயம் சொல்கிறது..


                         இந்த விதிமுறைகள், சுயநல பேய்கள் வார்த்த
                         லஞ்சமோ!..
                         உண்மை நெஞ்சங்களுக்கு
                         இந்நாட்டில் பஞ்சமோ! ..

                        என் இதயம் சொல்கிறது..


                        கனவுகளை தாரை வார்த்து விட்டு
                         வாழ்வதும் ஒரு வாழ்வோ!..
                       சாவதே அதற்க்கு மேலோ!..

                       
                       
                         Oh  Government  telling  to,
                   O  Save Our Tigers
                  O   Save  Our  Trees
                  Who is there to save my Dreams ?


                  உண்மையைக் கேட்க உனக்கு

                     


                     
                  வலிமை இல்லையெனில்,
                  அமலுக்கு கொண்டு வா
                   உண்மை தடுப்பு சட்டதை!..

                  என் கருத்துக்கு தடை போடவே,
                  POTA சட்டமோ!..


                      என் உணர்வுக்கு பட்டா போடுவதே
                     ஜனநாயகமோ!..

                    என் கனவுகள் என்னோடு அழிந்து போகட்டும்!..
                    என் கேள்விகள் வேரோடு சிதைந்து போகட்டும்!..
                    இந்த ஜனநாயக நாட்டிலே!..

                    என் உரிமையை
                    என் கையில் வை..
                    என் உரிமையை
                    என் நெஞ்சில் விதை!..


                  

2 comments: